வியாழன், 4 நவம்பர், 2010
வியாழன், 7 அக்டோபர், 2010
அவள்
செவ்வாய், 5 அக்டோபர், 2010
சாவி
யாரிடம் சாவி வாங்கினாய் ?
என் ...
மனதை திறக்க
அவளிடமே ! கேள்
உன் இதழைத்திறக்க ....
ஒரு சாவி .
சனி, 18 செப்டம்பர், 2010
உவமைக்கவி
தாசனின் தாசனாகவே வாழ்ந்தாய் .
உன் உவமைகள் உவமேயத்தை _ மட்டும்
சிறப்பிக்கவில்லை .,
தமிழையும் சிறப்பித்தது .
உவமேயத்தை சிறப்பிக்கும்
உவமையல்ல _ நீ
உவமையை சிறப்பிக்கும்
உவமையே ! _ நீ
உன் இழப்பையும் , இடத்தையும்
நீயின்றி நிரப்புவாரில்லை .,
ஆறுதலுக்கு உவமையென்ன கண்டாய்
அவ்வுவமை ஆற்றுமா ? எம்மனதை .,
உவமை பெற்றெடுத்த ...
உவமையே !
அறிவியல் ஆயுளை நீட்டிக்கவில்லையே !
இருந்திருந்தால் ?
அருகுபோல் இருப்பாயே !
உன் இழப்பு
யாப்பிற்கோ ! பேரிழப்பு .,
பாரதிதாசா ! உன் புகழை செப்பணிட்ட
சிற்பியை இழந்தோம் .,
தமிழே ! _ நீ
யாப்பின் உளியை இழந்தாய் .,
விழுதுகள் பற்றாத நிலையில்
வேரறுந்ததே !
விருட்சகமென்னவாகுமோ ?
அடிக்கரும்பைப்போல் தமிழில் _ உன்காலம்
இனித்துக்கொண்டே ! இருக்கும் .,
உன் உவமை ...
தமிழின் பெருமை .
தங்க நகர்
இருந்தது நம்பிக்கை .,
துடுப்புகளற்ற போதும்
தொலைநோக்கு வெற்றி .,
உயர்ந்த உழைப்பால் கிடைத்த
ஒப்பற்ற தங்கம் .
திங்கள், 13 செப்டம்பர், 2010
ஆகசுட்டு _ 15
அறிவாய் அறியாமையை
சுதந்திர நாள் ?
கொடியேற்றி இனிப்பு தந்து அரசுவிடுமுறை . ,
மறந்திட முடியுமா ?
என்றோ ! ஒருநாள் ...
அடிமையாய் இருந்தோம் என்பதை
அறிவுருத்தும் நாளல்லவா ?
காயங்கள் ஆறினும்
வடுக்கள் மிச்சமிருக்கிறதே ! மீண்டும் ஏன் ?
பகைமையிடம் தோழமை .
அன்று ... சந்தைக்கு இடம் கொடுத்து
சந்தித்த அவலம் மறந்தீரோ ?
அரசியலாரின் விருப்பமென்னவோ !
வரலாற்றில் பெயர் வீற்றிருந்தால் ? போதுமென்றால் ...
மக்கள் நலன் மண்ணிற்கு
இரையாகமல் மீளுமோ ?
இன்னுமொரு காந்தியில்லையே !
அடியும் மிதியும்பட்டு அகிம்சையோடு
சுதந்திரம் வாங்க ...
இன்னுமொரு சுபாசுமில்லையே !
சுதந்திரப் படைதிரட்ட ...
இன்னுமொரு நேருமில்லையே !
தலைமையேற்று வழிநடத்த ...
இன்னுமொரு அண்ணலில்லையே !
அரசியல் சட்டம் இயற்ற ...
இன்னும் பிற தியாகிகளில்லையே !
தீக்கிரையாகிட ...
செக்கிழுத்திட ...
தூக்கை முத்தமிட ...
கம்பிக் கதவறையில் கரைந்து போக ...
அய்யோ ! அவலம் அறிவாய் அறியாமையை
இளைய சமுதாயமே ! அந்நியம் தவிர் !
தேசம் கார் ,
சுதந்திரம் பேண் .
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
சா தீ
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் “
மகாகவியே !
மண்ணியுமென்னை .?
சாதிகள் உண்டடி பாப்பா
குலம்கூறி பங்கிடாதது பாவம்
செய்தி : மத , சாதி வாரியாக ஒதுக்கீடும் அதற்கான செலவும் .
கண் அடி
கண்ணெறிந்தேன்...
காய்களாக காய்த்து தொங்கின
விழிகளெங்கும் .
வேலிவிலக விளைந்த
விளைவு
நினைவுத் தீ
நீ வர... காற்றின் தவம் களைகிறது
உடைதிருத்தி என்னருகில் அமர்கிறாய்
பூத்த முகங்களோடு என்னை விழியில் எடுக்கிறாய்
மெளனம் களைகிறாய்...
பேச மறந்த விசயங்களென ...பேசி மகிழ்கிறாய்
தொடர்புகள் துண்டித்த போது தொங்கிய வார்த்தைகள் பேசுகிறாய்
தாமதத்திற்கு வருந்தி முகம் பார்க்கச் சொல்கிறாய்
கொடிபிடித்து விளையாடுகிறாய்
நம்மை தாண்டிச்செல்லும் வண்ணத்துபூச்சி கேட்கிறாய்
தம்பியிடம் பறித்த கடலைமிட்டாய் தருகிறாய்
இப்படியே ! சேர்ந்தே இருக்க வரம் கேட்கிறாய்
மணல்கூட்டி இருபெயரெழுதி அழிக்க முயல்கிறாய்
தடுத்து நிறுத்த கைகள் நீள்கின்றன ... காணமல் போகிறாய் நீ !?
வெள்ளி, 10 செப்டம்பர், 2010
இணைத்துணை
சிறகு விரித்தாய்...
இன்றோ !
இருந்து சென்ற
இடம் மட்டும் பசுமையாய் .
அறிகிறேன் ...
வசந்தகாலம் வந்துபோனதை
இன்று...
இலையுதிர்க்காலமாய் _ உன்
நினைவுகள் .
காதல் புதிது
விழி விரதமிருக்கத் தேவையில்லை
அக்கம்பக்க கண்கள் கண்டு
அச்சப்படத் தேவையில்லை
செவிழியோ ! புறாவோ !
செய்திதர வேண்டியதில்லை
ஈமெயிலனுப்பு
இண்டர்நெட் மூலம்
குறுந்தகவல் தருவேன்
செல்போன் மூலம்
புரிந்துணர
டேட்டிங் போவோம்
புரிந்துகொண்டால் !?
மேரேசு செய்வோம்
இரண்டு மட்டும் பெற்றுக்கொள்வோம்
முரண்பாடு முற்றுமெனில் !
விவாகரத்தின் போது
விவாதம் குறையும் .,
எதிர்காலம் கருதி ....
உனக்கு ஒருத்தனும்
எனக்கு ஒருத்தியும்
நம்மைப்போல பிரிந்திருப்பர்
சேர்ந்து வாழ .
சத்யசோதனை
மோப்பநாய் சோதனை .
”மகாத்மாவே !
இறந்த பிறகும் உன் அகிம்சை
சோதிக்கப்பட்டது சமாதியில் “
இவர்கள் கல்லறையில்.....
இவன்...
கனவு மெய்ப்பட்டது
எல்லோருக்கும் சமமாக இவனும் .
அன்னை தெரசா
உலக ...
சமாதானத்திற்காக மண்ணோடு
சமாதானம் செய்கிறார் .
கோழை
இன்று கூட
இவன் ... ஒழிந்தே ! இருக்கிறான் .
விலைமாது
சிவப்பு விளக்கை
சிங்காரித்தவள் இருளிலே
தனித்து .
சனி, 4 செப்டம்பர், 2010
எட்ட முடியாத உயரம்
இடம் தாண்டி
கடல் தாண்டி
கண்டம் தாண்டி
சிகரம் தாண்டி
வானம் , பிரபஞ்சம் தாண்டி
இன்னுமிருக்காயென ?
முடங்கிவிட்ட முயற்சியை
முடுக்கிவிட்ட இலக்கே !
நினைவுகள் பறக்கிறது
நீளும் கைகள் உன்னிடமே .
சிறை
தனிக்குடித்தனம்
தமையனோ !
மறு குடித்தனம்
மகனும் மகளும்
பகல்நேர பராமரிப்பில்
வெறும்வீடு
வேலக்காரியிடம்
அலுவலக அயர்வில்
மனைவி
நானோ ! வீடும் வேலையும்
இரவும் பகலுமாய்
விழித்திருப்பேன் ., தூங்கும் குழந்தைக்கும்
மனைவிக்கும் முத்தம் கொடுத்துறங்க
எழும்போது பார்க்கிறேன்
ஈரம் காயாத....
இரு முத்தங்களை கண்ணத்தில்
தனித்தனியாய்
தனிமை .
நகுலன் என்றொரு கவிதை
பசுமைப்புல் வளர்ந்த
வீட்டுவெளி
பழமையாய் ஒரு மிதிவண்டி
தோழமையாய் பூனை
தொங்கித்தூங்க
நாடா கட்டில்
இவருக்கென
இவர்கூட இல்லையாம் ?
காலம் தமிழுக்கு தந்த முதிர்ச்சியை
இவரிடமும் வாங்கிப்போனது
தமிழே! நீ
தங்கி வளர்ந்து , விவாதித்து
செழிப்புற்று ,செம்மைப்பட்டு
வெளியேறிய ...
பெரிய மனதுக்காரனின்
சிறிய வாழ்க்கையை வளமாக்கவில்லையே ?
தீந்தமிழே !
இதுபோல் தீர்ந்துபோகாதே .
குறிப்பு:
(நகுலனின் இறப்பால் எழுந்த இறந்துயரல் நாம் காலாண்டிதலுக்காக )
வானம் வசப்படும்
ஏழ்மைக்கும் இல்லாமைக்கும்
தகுதியானவர்கள்
உழைப்புக்கும்
களைப்புக்கும் உறவுக்காரர்கள்
பட்டினிக்கும்
நோய்க்கும் சந்தாதாரர்கள்
பதவிமானுக்கும்
பணக்காரருக்கும் கடனாளிகள்
முயற்சிக்கும் நாங்கள்
வெற்றிக்குத் தகுதியானவர்கள்
இவ்வானம்
ஒருநாள் வசப்படும் .
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
...................
அப்படியொரு பனிக்காலம்
இனி வராமல் போகலாம்
என்னோடு நான் முழுமையாக இருந்தேன்
கனவோ , கற்பனையோ , காட்சிப்பிழையோ அல்ல .
தேடல் அத்தனைக்கும் தேனாயிருந்தாள்
என்னவளை அறிமுகப்படுத்தினேன்
பிறந்த குழந்தை தவழ்வது போல் தவழ்ந்து
வளர்ந்து , கிளர்ந்து _ இன்று
அவளாகவே இருக்கிறாள் .
அவளுக்கான எல்லைக்கோட்டில்
பிரபஞ்சத்தை பெரிதாக்குகிறேன் .இன்னும்
கேட்டுக்கொண்டே இருக்கிறாள் _ ஆமா !
உன்னுள் நானெப்படி ?
..................
பயண அவதியில்
பாதியிலேயே முடிக்கிறேன்
உனக்கும் எனக்குமான பகிர்வுகளை
விரும்பி சுவைத்த இதழ்களை விட்டுவிட்டு தொடர்கிறேன் .
இன்னுமொரு இதழை ...
கிடைக்கும் கால அவகாசத்தில் சுவைப்பேன்
உங்கள் மரண விசாலவிசாரிப்பில்
மரித்திருக்கலாம் நான்
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
சாசகான் குறிப்புகள்....
வெண்கற்கள் இங்கே !
அழகைப் பூசிக்கொண்டது .
எழுத்துக்கள் வாங்காத காவியத்தை
கற்கள் வாங்கிக்காட்டின .
தூரிகை தொடாமல் _ ஓர்
உயிர் ஓவியம் .
பிரிந்த அழகின்
பிரியாத நினைவுகள் .
ஊடல்
விலகும் போது சுடுவாய் .
தூரயிருந்து எரியவிட்டு
பக்கம் வரும்போது..... அனைத்து விடுகிறாய் .
உயிர்
ஓடிப்போகவே முயற்சிக்கிறாய்
அதெப்படி ?
முடியும் ., நான் இறக்காமல் .
என்றாவது ஓர்நாள்
என்னை கொன்றுவிட்டுப் பிரிவயென அறிந்தும்
கூடுகிறேன்
பிரிவைத் தவிர்த்து
உன்னை
எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு பிடிக்கவில்லை .
நீ...... என்..... சமம்
அவள்
மனசு...
திறந்தேயிருந்தது
கதவு பூட்டியிருந்தது
புழுக்கம் அதிகமாக
சன்னலைத் திறந்தேன்
ஊடல் தாங்காத _ அவள்
கூடித்தழுவினாள்.,
எங்கோயிருந்த நான் !?
அப்பொழுதுதான் அங்கு வந்தேன்.
புனிதம்
புனிதம் என்றால் ?
திருடிக்கொண்டோம் பின் பகிர்ந்துகொண்டோம் .,
அதெப்படி!?
உன்னில் கானல் போல் நானும்
என்னில் காயம் போல் நீயும்.
கத்தியின்றி...... இரத்தமின்றி.....
என்னைத்தந்த இதயத்தை
என்னில்...
வைக்க எண்ணமில்லை
தந்துவிடு...
உன் இதயத்தை.
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
ஊடல்
நிற்க .,
தேடினேன் பேனாவும் , பேப்பரும்
எழுதுமுன் ஊடல் அவளைப்போல....
அவள் நினைவுகளும் .
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
புதன், 18 ஆகஸ்ட், 2010
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
என்னவள்
தனியே உட்கர்ந்து கொண்டு என்ன ? செய்கிறாய் என
அம்மாவிற்குத் தெரியாது . , நான் ......
உன்னோடு இருக்கிறேனென்று