அப்படியொரு பனிக்காலம்
இனி வராமல் போகலாம்
என்னோடு நான் முழுமையாக இருந்தேன்
கனவோ , கற்பனையோ , காட்சிப்பிழையோ அல்ல .
தேடல் அத்தனைக்கும் தேனாயிருந்தாள்
என்னவளை அறிமுகப்படுத்தினேன்
பிறந்த குழந்தை தவழ்வது போல் தவழ்ந்து
வளர்ந்து , கிளர்ந்து _ இன்று
அவளாகவே இருக்கிறாள் .
அவளுக்கான எல்லைக்கோட்டில்
பிரபஞ்சத்தை பெரிதாக்குகிறேன் .இன்னும்
கேட்டுக்கொண்டே இருக்கிறாள் _ ஆமா !
உன்னுள் நானெப்படி ?