ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

...................

அப்படியொரு பனிக்காலம்

இனி வராமல் போகலாம்

என்னோடு நான் முழுமையாக இருந்தேன்

கனவோ , கற்பனையோ , காட்சிப்பிழையோ அல்ல .

தேடல் அத்தனைக்கும் தேனாயிருந்தாள்

என்னவளை அறிமுகப்படுத்தினேன்

பிறந்த குழந்தை தவழ்வது போல் தவழ்ந்து

வளர்ந்து , கிளர்ந்து _ இன்று

அவளாகவே இருக்கிறாள் .

அவளுக்கான எல்லைக்கோட்டில்

பிரபஞ்சத்தை பெரிதாக்குகிறேன் .இன்னும்

கேட்டுக்கொண்டே இருக்கிறாள் _ ஆமா !

உன்னுள் நானெப்படி ?

..................

பயண அவதியில்

பாதியிலேயே முடிக்கிறேன்

உனக்கும் எனக்குமான பகிர்வுகளை

விரும்பி சுவைத்த இதழ்களை விட்டுவிட்டு தொடர்கிறேன் .

இன்னுமொரு இதழை ...

கிடைக்கும் கால அவகாசத்தில் சுவைப்பேன்

உங்கள் மரண விசாலவிசாரிப்பில்

மரித்திருக்கலாம் நான்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

சாசகான் குறிப்புகள்....

அவள் பெயரைக் கேட்டவுடன்

வெண்கற்கள் இங்கே !
அழகைப் பூசிக்கொண்டது .

எழுத்துக்கள் வாங்காத காவியத்தை
கற்கள் வாங்கிக்காட்டின .

தூரிகை தொடாமல் _ ஓர்
உயிர் ஓவியம் .

பிரிந்த அழகின்
பிரியாத நினைவுகள் .

வராத வசந்தம்

கோடை
வாடை

முன்பனி
பின்பனி

மழை
எக்காலமும்

தனிமை தண்டிக்கும் _ உன்
நினைவோடு நான் .

ஊடல்

நெருப்பு நெருங்கும் போது சுடும் _நீ
விலகும் போது சுடுவாய் .

தூரயிருந்து எரியவிட்டு
பக்கம் வரும்போது..... அனைத்து விடுகிறாய் .

மலடி

விதை பதர்
முளை பழுது
பாவம் _ அவள் மலடி

காதல்

நேற்றைய நினைவில்
ரோசா இதழ்களை.... தேடுகிறேன் _ இன்னும்
பாதையில் .

உயிர்

என்னை விட்டு
ஓடிப்போகவே முயற்சிக்கிறாய்

அதெப்படி ?
முடியும் ., நான் இறக்காமல் .

என்றாவது ஓர்நாள்
என்னை கொன்றுவிட்டுப் பிரிவயென அறிந்தும்

கூடுகிறேன்
பிரிவைத் தவிர்த்து

உன்னை
எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு பிடிக்கவில்லை .

நீ...... என்..... சமம்

அவள்

மனசு...

திறந்தேயிருந்தது

கதவு பூட்டியிருந்தது

புழுக்கம் அதிகமாக

சன்னலைத் திறந்தேன்

ஊடல் தாங்காத _ அவள்

கூடித்தழுவினாள்.,

எங்கோயிருந்த நான் !?

அப்பொழுதுதான் அங்கு வந்தேன்.

புனிதம்

காதல் ...
புனிதம் என்றால் ?
திருடிக்கொண்டோம் பின் பகிர்ந்துகொண்டோம் .,

அதெப்படி!?
உன்னில் கானல் போல் நானும்
என்னில் காயம் போல் நீயும்.

காதல்

காதல் ....
இருவர் சம்மந்தப்பட்டது _ என்று
யார் சொன்னது ?

என்னைப்போல
எத்தனையோ ! பேர் .

மிச்சம்

அன்பே!
உன் நினைவுகளின் மிச்சம்
நானல்ல...
கவிஞன்

கத்தியின்றி...... இரத்தமின்றி.....

உன்னிடம்...
என்னைத்தந்த இதயத்தை

என்னில்...
வைக்க எண்ணமில்லை

தந்துவிடு...
உன் இதயத்தை.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ஊடல்

அவள் நினைவுகள்
நிற்க .,
தேடினேன் பேனாவும் , பேப்பரும்
எழுதுமுன் ஊடல் அவளைப்போல....
அவள் நினைவுகளும் .

கவனம்

நாடெங்கும் தீயவர்களைக் காணேன்
எல்லோரும் நல்லவர் ., முகத்தோடு

கூரை

வானம் ., மாயையென்று வாதிடேன்
ஏழை - அதைத்தான் கூரையெனக்கூறி
உறங்கிக்கொண்டிருக்கிறான் ., தினமும்.

இனி....

இனி...
பனி மொட்டுக்கள் பகலவன் வருகைக்காக
மட்டுமல்ல !
பாமரனின் தோளுக்காகவும்
பூக்கட்டும்.

தூரிகை கைது

என்னவள் ...
இதழ் வரைந்து எடுத்தபோது ,
எடுத்த முத்தத்தை தந்துவிடக்கோரி.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

.............

இறைவன் படைப்பினிலே !
இடையே மறந்தது . ,
பெண்ணிடம்தானா !?

புதன், 18 ஆகஸ்ட், 2010

சுவடு

அம்மா .....
சேயாக எனை வளர்க்க
தாயாக உன் அடிவயிறு வாங்கிய
அடையாளக் கோடுகள் .

அப்பா

விழுதாய் இருந்து அறியாததை
வேரான போது அறிகிறேன் . ,
வேரின் வலியை.

அவள்

என் சிந்தனைக்கு ஒரு நிபந்தனை
காதல் வேண்டாமென்று ,
நான் சிந்தனை செய்யத்தொடங்கியதும்
காதல் நிந்தனை செய்கிறது ....... அவளைப்போல .

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

என்னவள்

அம்மா வினாவினாள் _ அங்கே
தனியே உட்கர்ந்து கொண்டு என்ன ? செய்கிறாய் என
அம்மாவிற்குத் தெரியாது . , நான் ......
உன்னோடு இருக்கிறேனென்று