சனி, 4 செப்டம்பர், 2010

சிறை

தாய் தந்தை
தனிக்குடித்தனம்

தமையனோ !
மறு குடித்தனம்

மகனும் மகளும்
பகல்நேர பராமரிப்பில்

வெறும்வீடு
வேலக்காரியிடம்

அலுவலக அயர்வில்
மனைவி

நானோ ! வீடும் வேலையும்
இரவும் பகலுமாய்

விழித்திருப்பேன் ., தூங்கும் குழந்தைக்கும்
மனைவிக்கும் முத்தம் கொடுத்துறங்க

எழும்போது பார்க்கிறேன்
ஈரம் காயாத....
இரு முத்தங்களை கண்ணத்தில்

தனித்தனியாய்
தனிமை .

கருத்துகள் இல்லை: