தாய் தந்தை
தனிக்குடித்தனம்
தமையனோ !
மறு குடித்தனம்
மகனும் மகளும்
பகல்நேர பராமரிப்பில்
வெறும்வீடு
வேலக்காரியிடம்
அலுவலக அயர்வில்
மனைவி
நானோ ! வீடும் வேலையும்
இரவும் பகலுமாய்
விழித்திருப்பேன் ., தூங்கும் குழந்தைக்கும்
மனைவிக்கும் முத்தம் கொடுத்துறங்க
எழும்போது பார்க்கிறேன்
ஈரம் காயாத....
இரு முத்தங்களை கண்ணத்தில்
தனித்தனியாய்
தனிமை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக