வெள்ளி, 10 செப்டம்பர், 2010

காதல் புதிது

வழி மீது
விழி விரதமிருக்கத் தேவையில்லை

அக்கம்பக்க கண்கள் கண்டு
அச்சப்படத் தேவையில்லை

செவிழியோ ! புறாவோ !
செய்திதர வேண்டியதில்லை

ஈமெயிலனுப்பு
இண்டர்நெட் மூலம்

குறுந்தகவல் தருவேன்
செல்போன் மூலம்

புரிந்துணர
டேட்டிங் போவோம்

புரிந்துகொண்டால் !?
மேரேசு செய்வோம்

இரண்டு மட்டும் பெற்றுக்கொள்வோம்
முரண்பாடு முற்றுமெனில் !

விவாகரத்தின் போது
விவாதம் குறையும் .,

எதிர்காலம் கருதி ....

உனக்கு ஒருத்தனும்
எனக்கு ஒருத்தியும்

நம்மைப்போல பிரிந்திருப்பர்
சேர்ந்து வாழ .

கருத்துகள் இல்லை: