வழி மீது
விழி விரதமிருக்கத் தேவையில்லை
அக்கம்பக்க கண்கள் கண்டு
அச்சப்படத் தேவையில்லை
செவிழியோ ! புறாவோ !
செய்திதர வேண்டியதில்லை
ஈமெயிலனுப்பு
இண்டர்நெட் மூலம்
குறுந்தகவல் தருவேன்
செல்போன் மூலம்
புரிந்துணர
டேட்டிங் போவோம்
புரிந்துகொண்டால் !?
மேரேசு செய்வோம்
இரண்டு மட்டும் பெற்றுக்கொள்வோம்
முரண்பாடு முற்றுமெனில் !
விவாகரத்தின் போது
விவாதம் குறையும் .,
எதிர்காலம் கருதி ....
உனக்கு ஒருத்தனும்
எனக்கு ஒருத்தியும்
நம்மைப்போல பிரிந்திருப்பர்
சேர்ந்து வாழ .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக