வலிய தேடலுக்குப்பின் ...
பசுமைப்புல் வளர்ந்த
வீட்டுவெளி
பழமையாய் ஒரு மிதிவண்டி
தோழமையாய் பூனை
தொங்கித்தூங்க
நாடா கட்டில்
இவருக்கென
இவர்கூட இல்லையாம் ?
காலம் தமிழுக்கு தந்த முதிர்ச்சியை
இவரிடமும் வாங்கிப்போனது
தமிழே! நீ
தங்கி வளர்ந்து , விவாதித்து
செழிப்புற்று ,செம்மைப்பட்டு
வெளியேறிய ...
பெரிய மனதுக்காரனின்
சிறிய வாழ்க்கையை வளமாக்கவில்லையே ?
தீந்தமிழே !
இதுபோல் தீர்ந்துபோகாதே .
குறிப்பு:
(நகுலனின் இறப்பால் எழுந்த இறந்துயரல் நாம் காலாண்டிதலுக்காக )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக